ஆப்நகரம்

10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை... இளைஞர் கைது

ஆத்தூர் அருகே பத்தாம் வகுப்பு பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 17 Mar 2021, 1:59 pm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பைத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர் கூலி வேலை செய்யும் இந்த தம்பதி பத்தாம் வகுப்பு படிக்கும் மூத்த மகளை அருகில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டு பின்னர் தனது இரண்டு பிள்ளைகளுடன் அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டனர்.
Samayam Tamil pocso act


வேலை முடித்து விட்டு வீடு திரும்பிய தம்பதி வீட்டில் மூத்த மகள் இல்லாததால் அக்கம் பக்கத்திலும் தேடியுள்ளனர்,கிடைக்காததால் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்,இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் பத்தாம் வகுப்பு மாணவியை தேடி வந்தனர்.

இதனையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கடம்பூரைச் சேர்ந்த பெருமாள் மகன் ராமருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது பின்னர் மாணவியின் பெற்றோரிடம் பெண் கேட்டு தராததால் இரு நாட்களுக்கு முன்பு மாணவியை கடத்திய ராமர் பலாத்காரம் செய்துள்ளார்.

ரயில்வே தனியாரிடம் செல்கிறதா? அரசு விளக்கம்!

இது குறித்து மாணவியின் பெற்றோர் ஆத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ராமரை பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்

அடுத்த செய்தி