ஆப்நகரம்

அண்ணாமலை பெஸ்ட்; இபிஎஸ் வேஸ்ட்?; திமுகவுக்கு புது பாடம் எடுத்த சரத்குமார்!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் குறித்து பரபரப்பு கருத்து கூறிய சரத்குமார் திடீரென திமுகவுக்கு பாடம் எடுத்துள்ளார்.

Samayam Tamil 14 Jun 2022, 6:08 pm
சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சமத்துவ மக்கள் கட்சி நிறுவனத் தலைவரும், நடிகருமான சரத்குமார் வருகை தந்தார். அப்போது சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
Samayam Tamil சரத்குமார்
சரத்குமார்


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது பெரிய அளவில் ஏதுமில்லை. பெரியளவிலான குற்றச்சாட்டை கூற முடியாது. பாரதிய ஜனதா கட்சி மதத்தை வைத்து அரசியல் நடத்துவதாக கூறப்படுகிறது. மற்ற மதத்தவரை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்ட பாஜகவினர் மீது கட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த விஷயம் உலக அளவில் பேசப்பட்டது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. இனி வரும் காலங்களில் அனைவரும் சமம் சமத்துவம் என்ற சூழ்நிலையை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்.



பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதான எதிர்க்கட்சி தலைவராக தான் செயல்பட்டு வருகிறார். அவரது கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினர் கடமை.

தமிழ்நாட்டில் 4 முதல்வர்கள்?; சிக்கிய எடப்பாடி பழனிச்சாமி!

எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கருத்துக்களை முன்வைக்காத நிலையில் பாஜக முன்வைப்பது தவறில்லை. சமத்துவ மக்கள் கட்சியை பொறுத்தவரையில் தொய்வு அடையவில்லை.

தேர்தலில் போட்டியிடுவதால் தங்கள் கையில் இருக்கும் பணத்தையும் இழக்க நேரிடும் என்பதால் கட்சி நிர்வாகிகள் தயங்குகின்றனர். இருப்பினும் மக்கள் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

மோடி வெளிநாட்டு பயணம்; வெளியானது பகீர் தகவல்கள்!
ஜனநாயக அரசியல் தற்போதைய சூழ்நிலையில் இல்லாமல் உள்ளது. கோடி கோடியாக தேர்தலில் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் சராசரி குடிமகன் அரசியலுக்கு வர முடியாது. இவ்வாறு சரத்குமார் கூறினார். இந்த பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அடுத்த செய்தி