ஆப்நகரம்

தமிழகத்தில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது-கேபி ராமலிங்கம்

அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் 40% போலி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது சேலத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே பி ராமலிங்கம் பேட்டி அளித்தார். சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து தன்னுடைய குடும்பத்தை வளர செய்யும் முதல்வர் ஸ்டாலினின் அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும் சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது, திமுக நிர்வாகிகளால் சந்து கடை அதிக அளவில் செயல்படுகிறது கே பி ராமலிங்கம் குற்றம் சாட்டினார்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 20 May 2023, 6:06 pm

ஹைலைட்ஸ்:

40% போலி மதுபானங்கள் விற்பனை
முதல்வர் ஸ்டாலினின் அரசாங்கம் விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்
தமிழகத்தில் கள்ள சாராயம் ஆறாக ஓடுகிறது
திமுக நிர்வாகிகளால் சந்து கடை அதிக அளவில் செயல்படுகிறது
கே பி ராமலிங்கம் குற்றச்சாட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil salem
Salem
சேலத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் கே பி ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல்லில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு: கிராம மக்கள் நூதன போராட்டம்
உயிரிழப்பு ஏற்படவில்லை
கள்ள சாராயம் குடித்து 22 நபர்கள் உயிரிழந்த சம்பவம் இதுவே முதல் முறை. மதுவிலக்கு அமல்படுத்தியிருந்த காலகட்டத்தில் கூட இதுபோன்ற ஒரு உயிரிழப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் தற்போது சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இரவிலும் கட்டுப்பாட்டை மீறி மது விற்பனை நடைபெறுகிறது. மது கடைகள் மூடிய பிறகும் விடிய விடிய மது விற்பனை நடைபெறுகிறது.
சந்துக்கடை
மேலும் தமிழக முழுவதும் சந்துக்கடை என்று திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களை நடத்தி வருகிறார்கள். அவர்களே மது விற்பனை செய்து வருகிறார்கள். அப்படி இருந்தும் எப்படி தமிழகத்தில் இவ்வளவு கள்ள சாராயம் பெருகி உள்ளது என்ற கேள்வி இன்று அனைவரும் மத்தியில் எழுந்துள்ளது.

போலி மது
ஏனென்றால் தமிழகத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்பதே போலி மது தான் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்கப்படும் மது பாட்டில்கள் போலியானவை. வருமானத்தை குறைப்பதற்காக வரியை ஏய்ப்பதற்காக ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் 40 சதவீதமான மது பாட்டில்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வராமல் வெளிப்பகுதிகளில் இருந்து வருகிறது.

விற்பனை
அதனை பார்கள் மூலமாகவும் விற்பனை செய்து வருகிறார்கள். இதற்கு பெயர் தான் கரூர் கும்பல் என்று சொல்லி வருகிறது. அரசாங்கமே போலி மதுவை கொடுக்கும் பொழுது நாம் ஏன் நல்ல சாராயத்தை குடிக்க கூடாது என்று தான் அவர்கள் இன்றைக்கு விலை குறைவான சாராயத்தை வாங்கி குடிப்பதற்கு தயாராகி விட்டார்கள்.

முற்றுப்புள்ளி
இந்த நிலை தொடரக்கூடாது முற்றுப்புள்ளி உடனடியாக வைக்க வேண்டும் கள்ள சாராயத்தை மட்டும் தடுக்க கூடாது அரசு மதுபான கடைகளில் விற்கப்படும் போலி மதுவையும் தடுத்திட வேண்டும். சாராயத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் இந்த அரசாங்கம் மிக விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படும்.

திராவிட மாடல்
மாநிலத்தின் உரிமை திராவிட மாடல் உரிமை. இதுதான் திராவிட மாடல் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவர்கள் தான் அதிக அதிகாரம் படைத்தவர்கள். வானாகிய அதிகாரம் படைத்தவர்கள் இது போன்ற உயிரிழப்புகள் ஏற்படுகின்ற பொழுது மட்டும் மத்திய அரசு ஏதாவது செய்ய வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக உள்ளது.

ஊழல் அரசாங்கம்
இவர்கள் செய்யும் அயோக்கியத்தனத்திற்கு அடாவடிக்கும் அராஜகத்திற்கும் ஊழலுக்கும் எப்படி நாங்கள் பங்கு பெற முடியும். இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் ஊழல் அரசாங்கம். சாராயத்தை திருடி தன்னுடைய குடும்பத்தை வளர்த்துக் கொள்கின்ற அரசாங்கம். சாராயத்தில் ஏழை எளிய மக்களை கொன்று விட்டு அதில் கிடைக்கும் 30 சதவீத கமிஷன் தொகையை வைத்து தன்னுடைய குடும்பத்தை நடத்தும் அரசு இந்த அரசு கேடுகெட்ட குடும்பமாக இருப்பது தான் இந்த அரசாங்கம்.
தமிழக அரசு ஒரு நாடக அரசு-சிவிசண்முகம் குற்றச்சாட்டு
வித்தியாசம் கிடையாது
இவர்கள் பிணத்திலிருந்து பணத்தை எடுத்து தின்றும் நபர்களுக்கும் இந்த முதலமைச்சரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கும் எந்த ஒரு வித்தியாசமும் கிடையாது. சாராயத்தில் வரும் வருமானத்தை வைத்து வாழ்கின்ற குடும்பம் எத்தனை நாட்களுக்கு உருப்படி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி