ஆப்நகரம்

பொங்கல் பரிசு: பெரியளவில் முறைகேடு, வெளியானது ஆதாரம்!

ஆண்களுக்கு வேஷ்டிக்குப் பதில் புடவை கொடுத்து அவமதிப்பதாகத் தொழிலாளர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்...

Samayam Tamil 12 Jan 2021, 3:23 pm
கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்குவதில் பெரும் முறைகேடு நடந்துள்ளது தொடர்பாக ஆதாரத்துடன் குற்றச்சாட்டு வெளியாகியுள்ளது.
Samayam Tamil பொங்கல் பரிசு: பெரியளவில் முறைகேடு, வெளியானது ஆதாரம்!
பொங்கல் பரிசு: பெரியளவில் முறைகேடு, வெளியானது ஆதாரம்!


தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்குத் தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாகப் பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய் முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றை வழங்கியது.

மேலும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்குப் புடவையும் வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 12 இடங்களில் 88 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு விநியோகிக்கும் பணி நடந்து வருகிறது.

அதேபோல் சேலம் சூரமங்கலம் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. அப்போது, ஆண்களுக்கு வழங்கப்படும் வேஷ்டி துண்டுக்குப் பதிலாகப் புடவை வழங்கப்பட்டுள்ளது.

பரோட்டா வாங்கி தருவதாக பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

அதேவேளைப் பெண்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் புடவை விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வருத்தம் அடைந்துள்ள தொழிலாளர்கள், தமிழ்நாடு அரசு அறிவித்தபடி ஆண்களுக்கு வேஷ்டி துண்டு வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

மேலும் அவர்கள், வேஷ்டிக்குப் பதிலாகப் புடவையைத் தருவது தங்களை அவமதிக்கும் செயலாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி