ஆப்நகரம்

தமிழகம் குஜராத் போலத் தெரிகிறது: பிரதமர் மோடியின் சகோதரர் பேட்டி

700 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மக்கள் இங்கு பல்வேறு இடங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். தமிழகத்தை பார்க்கும்போது குஜராத்தைபோல் தெரிகிறது

Samayam Tamil 12 Dec 2020, 3:43 pm
எதிர்கால இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு முக்கியமானதாக இருக்கும். பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதரதாஸ் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பிரதமர் மோடியின் சகோதரர்


பாரத பிரதமர் மோடியின் இளைய சகோதரரும், பிரதம மந்திரி மக்கள் நலத்திட்ட விளம்பர பிரசார இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பின் அகில இந்திய தலைவருமான பிரகலாத் தாமோதரதாஸ் மோடி பெங்களூருவில் இருந்து மதுரை செல்லும் வழியில் சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தின் கலாச்சாரம் இங்கு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 700 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மக்கள் இங்கு பல்வேறு இடங்களில் குடியேறி வசித்து வருகின்றனர். தமிழகத்தை பார்க்கும்போது குஜராத்தைபோல் தெரிகிறது” என்றார்.

ராஜா செல்லையா: ரஜினியைக் கொண்டாடி இவரை விட்டுட்டோமே!!!

மேலும், “மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தமிழக அரசும், தமிழக மக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்” என்று தெரிவித்த அவர், “பிரதமர் மோடியின் திட்டங்களில் முக்கியமான மிக ஏழ்மையில் உள்ளவர்களுக்கான திட்டம், 2022க்குள் அனைவருக்கும் வீடு திட்டம் போன்ற திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறோம்” என்று கூறினார்.

இத்துடன், “சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழர்களின் பங்கு முக்கியமாக இருந்ததுபோல் தற்போது நாட்டின் வளர்ச்சியில் தமிழர்களின் பங்கு மிக முக்கிமானதாக இருக்கும்” என்றார். தொடர்ந்து பேசும்போது,
நடிகர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

அடுத்த செய்தி