ஆப்நகரம்

குழந்தையை விற்று கடனை அடைக்க மிரட்டும் கந்து வட்டி கும்பல்; கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மல்க புகார்!

வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு குழந்தையை விற்று கடனை அடைக்குமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடத்தில் தம்பதி கண்ணீர் மல்க பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Sep 2022, 5:52 pm

ஹைலைட்ஸ்:

  • காவலரிடம் வட்டிக்கு கடன் வாங்கிய தம்பதி
  • வட்டிக்கு வாங்கிய பணத்திற்கு குழந்தையை விற்று கடனை அடைக்குமாறு கந்துவட்டி கும்பல் மிரட்டல்
  • கணவன் மனைவி கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கலெக்டரிடம் தம்பதி கண்ணீர் மல்க புகார்
சேலம் மாவட்டம் ஓமலூர் காமராஜர் பகுதியை சேர்ந்தவர் தனபாலன். இவரது மனைவி நிஷா. இவர்கள் சொந்த செலவுக்காக ஓமலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தங்கத்துரை என்ற காவலரிடம் வட்டிக்கு பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தன்னுடைய சொந்த தேவைக்காக இரண்டு லட்ச ரூபாய் பெற்றுக் கொண்ட தனபால் அதில் பிடித்த 20 ஆயிரம் ரூபாய் போக ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளார். மாதம் அதற்கு 25 ஆயிரம் ரூபாய் வட்டி தர வேண்டும் என்றும், எழுதி வாங்கிக்கொண்டு அதன்படி வட்டியும் வசூலித்து வந்ததாக கூறப்படுகிறது.

வாங்கிய இரண்டு லட்சத்திற்கு வட்டியுடன் சேர்த்து 5 லட்சம் ரூபாய் தம்பதியினர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் வாங்கிய பணத்தையும் வட்டியையும் சேர்த்து எட்டு லட்ச ரூபாய் தர வேண்டும் என தங்கதுரையும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து தனபால் மற்றும் அவரது மனைவியை தினந்தோறும் அவதூறு வார்த்தைகளை பேசி கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.


ஒரு கட்டத்தில் அவர்களின் ஒரு வயது குழந்தை கழுத்தில் அணிந்திருந்த தங்க சைனையும் வட்டிக்காக கடன் கொடுத்தவர்கள் பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் முழுமையாக வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்து உடனடியாக கட்டுமாறும், இல்லையெனில் குழந்தையை விற்று பணத்தை கொடுக்குமாறும் தெரிவித்தனர். மேலும் குழந்தைகளை விற்பதற்காக தங்களிடமே ஆட்கள் உள்ளதாகவும் 10 லட்ச ரூபாய் வரை குழந்தை விலை போகும் என தகவலையும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த தனபால் மட்டும் நிஷா தம்பதியினர் வேறு வழியில்லாமல் கேரளாவுக்கு தலைமறைவாகி உள்ளனர். ஆனால் தினந்தோறும் தனபாலின் உறவினர்களிடம் பணம் கொடுத்த கும்பல் ரகளையில் ஈடுபட்டதாக புறப்படுகிறது.

இந்த நிலையில் வேறு வழியில்லாமல் இன்று மாவட்ட ஆட்சியரகத்திற்கு வந்த தனபால் மட்டும் நிஷா ஆகியோர் மாவட்ட ஆட்சியர் இடத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்தனர். வாங்கிய 2 லட்ச ரூபாய்க்காக 5 லட்ச ரூபாய் வட்டியுடன் சேர்த்து கொடுத்து விட்டதாகவும், மேலும் வட்டி மேல் வட்டி கேட்டு தங்களை தொந்தரவு செய்வதாகும், தங்கள் குழந்தையை விற்று பணம் கொடுக்கச் சொல்லி மிரட்டுவதாகவும் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அனுமதியில்லாமல் பாராகிளைடிங் சாகசம் செய்த இளைஞர்; வைரலாகும் வீடியோ!

இது குறித்து பாதிக்கப்பட்ட நிஷா மற்றும் தனபால் கூறும் போது, தினந்தோறும் தங்களை சந்தித்து தகாத வார்த்தைகளாலும், அவதூறு பேச்சுகளால் மனம் நோகும் வகையில் திட்டுவதாகவும் வாங்கிய பணத்தை முழுவதும் கொடுத்த பின்னரும் அவர் காவல்துறையில் பணிபுரிந்து வருவதால் தன்னை ஏதும் செய்ய முடியாது எனக் கூறி மிரட்டுவதாகவும், பணம் கொடுக்காவிட்டால் கஞ்சா வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன் என மிரட்டுவதாகவும் கணவன், மனைவி இருவரும் தெரிவித்தனர்.

வாங்கிய கடனுக்காக குழந்தையை விற்று பணத்தை கொடுக்க வற்புறுத்தும் கந்து வட்டி கும்பலிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய காவல்துறையில் இப்படி ஒரு காவலர் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி