ஆப்நகரம்

பாமகவைக் கழற்றிவிடும் அதிமுக? விலைபேசுகிறாரா முதல்வர்?

பாமக அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு ஆதரவாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலை செய்ய வேண்டும்

Authored byபாம்பன் மு.பிரசாந்த் | Samayam Tamil 9 Dec 2020, 2:38 pm
முதல்வர் பழனிசாமி, எடப்பாடி சட்டமன்றth தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராகவும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போதைய முதல்வராகவும் இருந்து வருகிறார்.
Samayam Tamil பாமக அண்ணாதுரை


எடப்பாடி சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை வன்னியர், கொங்கு வேளாளர், தலித் உள்ளிட்ட குழுக்களைக் கொண்ட தொகுதி என்பது முதலில் புரிந்து கொள்ள வேண்டியது. இங்கு யார் சட்டமன்ற உறுப்பினராக வேண்டும் என தீர்மானிக்கும் சக்திகளில் ஒன்றாக வன்னியர் இனக்குழுவும் விளங்குகின்றன.

தற்போது பாமக நடத்தும் 20 சதவீத இட ஒதுக்கீடு போராட்டம் எதிரொலியாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று கருதப்படுகிறது. பாமகவுக்கு ஆதரவான் நிலைப்பாட்டை எடுக்க முடியாத நிலையில், தற்போது அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பழனிசாமி மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டுமானால் பாமகவின் ஆதரவு நிச்சயம் தேவை.

ரஜினிகாந்தின் கட்சி பெயர், கொடி என்ன தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

இதற்காக ஒரு வேலை பார்க்கப்போய் தற்போது அது அம்பலமாகி அல்லல்பட வேண்டிய நிலை வந்துள்ளது முதல்வருக்கு. அதாவது, கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்டு இரண்டாவது இடம் பெற்ற பாமக வேட்பாளர் அண்ணாதுரையை அழைத்து முதல்வர் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.


இது குறித்து தெரிவித்த அண்ணாதுரை, முதல்வர் தன்னிடம், “பாமக அதிமுக உடன் கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தனக்கு ஆதரவாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வேலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததுடன், அதற்கு என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கூறியதாகத் தெரிவித்தார்.

இதனையடுத்து, ராமதாஸின் இட ஒதுக்கீடு போராட்டம் எதிரொலியாக தோல்வி பயத்தில் விலை பேசும் முதலமைச்சர் என்று அப்பகுதியில் கட்சி வட்டாரங்களுக்கிடையே பேச்சு எழுந்துள்ளது.

அடுத்த செய்தி