ஆப்நகரம்

ஆத்தூர் கோட்டாட்சியராக இளம்பெண் சரண்யா: வந்தவுடனே சேலத்திற்கு எச்சரிக்கை!

சேலம் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிய தலைவராகத் திருச்சிராப்பள்ளி துணை ஆட்சியர் சரண்யா இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 10 Jun 2021, 7:38 pm
தமிழகச் சட்டமன்ற தேர்தல் முடிந்ததையொட்டி புதியதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட திமுக முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அதிகாரிகளை இடம் மாற்றி ஆணை வெளியிட்டு வருகிறது.
Samayam Tamil ஆத்தூருக்கு இளம் கோட்டாட்சியர் சரண்யா: வந்தவுடனே சேலத்திற்கு எச்சரிக்கை!


அதன்படி சேலம் மாவட்டம் ஆத்தூர் வருவாய்க் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த துரையைக் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவருக்குப் பதிலாகத் திருச்சி மாவட்ட துணை ஆட்சியராகப் பயிற்சி பெற்று வந்த சரண்யா ஆத்தூர் வருவாய் கோட்டாட்சிய தலைவராக பணியிட மாற்றப்பட்டார். அதன்படி சேலம் வந்த சரண்யா இன்று முதல் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஃபேஸ்புக்கால் மனமுடைந்த சேலம் பாமக எம்எல்ஏ: போலீசிடம் செல்கிறார் நியாயம் கேட்டு!
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்க் கோட்டாட்சியத் தலைவர் சரண்யா, “ஆத்தூர் பகுதிகளில் பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்து கொரோனா அரசு விதிகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

முககவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறினார்.

அடுத்த செய்தி