ஆப்நகரம்

முன்னாள் முதல்வர் இபிஎஸ் தொகுதியில் கொரோனா நிலவரம் தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

முன்னாள் முதல்வர் பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில், அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களில் மூன்று பேர் ஒரே நாளில் உயிரிழந்தனர்.

Samayam Tamil 13 May 2021, 5:12 pm

ஹைலைட்ஸ்:

  • சேலம் மாவட்டத்திலும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் அதிமாக உள்ளது.
  • மாவட்டத்தில் ஒரே நாளில் 18 பேர் பலி
  • எடப்பாடி அரசு மருத்துவமனையில் 3 பேர் உயிரிழப்பு.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சேலம் எடப்பாடி அரசு மருத்துவமனை
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சிகக்குட்பட்ட பூலாம்பட்டி, கொங்கணாபுரம், வேம்பனேரி, புளியம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 220 பேருக்கு அண்மையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் பூலாம்பட்டி, குஞ்சாம்பாளையம், வேம்பனேரி, புளியம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் 9 பேருக்கும், கட்சுப்புள்ளி, சமுத்திரம், புதுப்பாளையம், பகுதிகளில் 9 பேருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து இப்பகுதிகளில் சுகாதார துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

என்ன நடக்குது சேலத்தில் 24 மணி நேரத்தில் 18பேர் சாவு: திணறும் அரசு!

இந்த நிலையில, எடப்பாடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மூன்று பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்ததால் பொது மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது..

மாவட்டத்தில் நேற்று மட்டும் 18 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி