ஆப்நகரம்

ரியல் எஸ்டேட் அதிபரிடம் சிபிஐ நாடகம்... வச்சு செய்த போலீசார்!

சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் 7 லட்ச ரூபாய் மற்றும் 2 சொகுசு கார்களை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 29 Mar 2022, 7:46 pm

ஹைலைட்ஸ்:

  • சிபிஐ அதிகாரிகள் எனக் கூறி ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி
  • 7 லட்ச ரூபாய் மற்றும் 2 சொகுசு கார்கள் திருட்டு
  • சூரமங்கலம் காவல்துறை நடவடிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil சிபிஐ நாடகம் ஆடிய 2 பேர் கைது
சேலம் ஜாகீர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (38). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரிடம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மர்ம நபர்கள் வந்து நாங்கள் சிபிஐ அதிகாரிகள் என்று கூறி உள்ளனர்.
மேலும் நீங்கள் தொழிலில் சம்பாதித்த பணத்தை அரசுக்கு கணக்கு காட்டாமல் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது. அதன்பேரில் நாங்கள் இங்கு வந்துள்ளோம். எனவே விசாரணைக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தி உள்ளனர்.


அவரின் புதிய விலை உயர்ந்த இரண்டு கார்களை எடுத்துக்கொண்டு, உடன் பூபதியை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். அதன் பிறகு பூபதியை மிரட்டி 7 லட்சம் பணம் வாங்கிக் கொண்டு, மீண்டும் வந்து இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இதுகுறித்து பூபதி ஜனவரி மாதம் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பிறகு பூபதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மீண்டும் காவல் நிலையத்திற்கு வர இயலவில்லை என போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மகனை அரசு பள்ளியில் சேர்த்த ஐ.பி.எஸ் அதிகாரி... குவியும் பாராட்டு!

போலீசார் விசாரணை நடத்தியதில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட தர்மபுரியை சேர்ந்த சுரேஷ் (42), தென்காசியை சேர்ந்த ராஜேஷ் (32), சென்னை சேர்ந்த ஜாகீத் அப்பாஸ்(48), ஐயப்பன் (26) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி