ஆப்நகரம்

கைதானால் விடுவிக்க 6 லட்சம்... காங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் கைது

ஒரு திருட்டு வழக்கில் இருந்து விடுவிக்க, ஓசூரை சேர்ந்த காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவரான சந்திரசேகரை நாடியுள்ளார்.

Samayam Tamil 9 Dec 2020, 9:49 am
திருட்டு வழக்கில் கைதானவர்களை விடுவிப்பதாகக் கூறி ரூ.6 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் இருவரை சேலம் போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil கைதான காங்கிரஸ் பிரமுகர்


கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகன் அபின். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து, பெங்களூரில் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களை திருடி சேலம் பகுதியில் விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே வாகன தணிக்கையில் அபின், ஆகாஷ் உள்ளிட்ட 6 பேரை சேலம் பள்ளப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

இதனிடையே அபினை வழக்கில் இருந்து விடுவிக்க பிரதீப், ஓசூரை சேர்ந்த காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட தலைவரான சந்திரசேகரை நாடியுள்ளார். இதையடுத்து சந்திரசேகர், சேலத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர் சரவணனை தொடர்பு கொண்டு அபினை விடுவிக்க உதவுமாறு தெரிவித்தார்.

ஸ்ரீரங்கம் கோயில் உண்டியல் காணிக்கை இவ்வளவு லட்சமா?

அதன்பேரில் பிரதீப்பிடம் இருந்து முதல் தவணையாக ரூ.4 லட்சமும், இரண்டாவது தவணையாக ரூ.2 லட்சம் பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் அபினை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அப்படியானால் “பணத்தைக் கொடுத்த நம்மை ஏமாற்றிவிட்டார்கள்” என்பது அந்தக் குடும்பத்துக்கு அப்போதுதான் தெளிவானது.

இதையடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியது தொடர்பாக பிரதீப் கொடுத்த புகாரின் பேரில், மோசடி செய்ததாக காங்கிரஸ் பிரமுகர்கள் சந்திரசேகர், சரவணன் ஆகியோரை பள்ளப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

அடுத்த செய்தி