ஆப்நகரம்

எல்லைமீறும் கொள்ளைகள்: ஒரே இரவில் இரண்டு இடங்களில் கொள்ளை

ஒரே நாளில் இரண்டு இடங்களில் இருவேறு கும்பல்கள் கொள்ளையடுத்திருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது.

Samayam Tamil 2 Dec 2020, 9:25 am
மருத்தகம்,அரிசி மண்டி ஆகிய இரண்டு கடைகளிலும் 30 ஆயிரம் திருடப்பட்டுள்ளது. பதிவான சிசிடிவி காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை மாநகர காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Samayam Tamil கொள்ளை


சேலம் நான்கு ரோடு பகுதியில் பிரபல தனியார் மருந்தகம் இயங்கி வருகிறது. நேற்று இரவு வழக்கம் போல் 10 மணியளவில் மருந்தகத்தினை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றுள்ளனர். இதனை அறிந்த கொள்ளையர்கள் ஷட்டரின் பூட்டை உடைத்து கடையிலிருந்து 18 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

தொடர்பாக பள்ளப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி பதிவாகியுள்ள காட்சிகளை கொண்டு கொள்ளையர்கள் தேடி வருகின்றனர். இந்த சிசிடிவி காட்சியில் 4 பேர் கொண்ட கும்பல் ஷாட்டரின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதைப்போல் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே நாமக்கல் மாவட்டம் பெரியமணலியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் அரிசி மண்டி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் தொழிலாளர்கள் அரிசி மண்டியை பூட்டி விட்டு சென்றதை அறிந்த கொள்ளையர்கள் ஷட்டரின் பூட்டு உடைத்து 12 ஆயிரம் திருடி சென்றுள்ளனர்.

சென்னைக்கு இன்னொரு புதிய சாலை : பயன்பாட்டுக்கு எப்போ?

இதுதொடர்பாக கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர். சேலம் மாநகரில் ஒரு இரவில் 24 மணி நேரமும் ஆள் நடமாட்டமுள்ள பரபரப்பான சாலையில் இயங்கி வரும் இரண்டு கடைகளின் ஷட்டரை உடைத்து துணிகர கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.

அடுத்த செய்தி