ஆப்நகரம்

எடப்பாடி குறித்து முதல்வர் உருக்கம்: பழனிசாமிக்கு சிஎம் யார் என்றும் விளக்கம்!

முதல்வர் பழனிசாமி தனது தொகுதியைப் பற்றி சொந்த ஊரில் பேசிய வார்த்தைகள் மாவட்ட மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என கூறப்படுகிறது.

Samayam Tamil 4 Apr 2021, 1:27 pm
எடப்பாடி தொகுதி வனவாசியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திமுக தலைவர் ஸ்டாலினைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
Samayam Tamil எடப்பாடி குறித்து முதல்வர் உருக்கம்: பழனிசாமிக்கு சிஎம் யார் என்றும் விளக்கம்!


சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் 7ஆவது முறையாக தற்போது முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி கே பழனிசாமி போட்டியிடுகிறார். இதையடுத்து இந்த முறை அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

எடப்பாடி தொகுதிக்குட்பட்ட வனவாசி பகுதியில் திறந்த வாகனத்தில் நின்றபடி பிரசாரம் செய்தபோது அவர் பேசியதாவது:
எடப்பாடி தொகுதி மக்கள் 2011, 2016இல் என்னை வெற்றி பெற வைத்துள்ளீர்கள். உங்களை ஒவ்வொரு முறை சந்திக்கும்போது, எனக்குப் பதவி உயர்வு கிடைத்துள்ளது.

உங்கள் ராசியால்தான் நான் முதலமைச்சராக ஆகியுள்ளேன். பல முறை வந்தபோதும் வனவாசியில் நான் பேசியதில்லை என்பதால் இப்போது வந்துள்ளேன்.

234 தொகுதியில் முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை எடப்பாடிக்குத்தான் உள்ளது. இந்த முதலமைச்சர் தொகுதி என்ற பெருமை உங்களால்தான் நமக்குக் கிடைத்துள்ளது. எத்தனை பிறவி எடுத்தாலும் எடப்பாடி தொகுதி மக்களை மறக்க மாட்டேன்.

எப்படி ஆயிடுச்சு பாருங்க? -எடப்பாடி பழனிசாமிக்காக நடிகை நமீதா பிரச்சாரம்!

நினைவில் வைத்திருப்பேன். ஒவ்வொரு முறையும் எனக்கு உயர்வைக் கொடுத்து வரும் வாக்காள பெருமக்கள் இந்த முறையும் எனக்கு வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

எவ்வளவோ கூட்டங்களில் பேசினாலும், சொந்த மண்ணில் பேசுகிறபோது எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்படுகிறது. வனவாசி பேரூராட்சியில் கடந்த முறை அதிக வாக்குகளை எனக்கு அளித்தீர்கள்.

நான் எப்போதும் அதே பழனிசாமியாகத்தான் உள்ளேன். உங்களில் ஒருவர்தான் நான். உங்கள் அனைவரையும் முதல்வராகப் பார்க்கிறேன். இந்த முறை அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக நிற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மீண்டும் முதலமைச்சராவதற்கு எனக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

அடுத்த செய்தி