ஆப்நகரம்

உலக வாசக்டமி தினம்... விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்

உலக வாசக்டமி தினம் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது.

Samayam Tamil 21 Nov 2020, 12:19 pm
உலக வாசக்டமி தினத்தை முன்னிட்டு சேலத்தில் ஆண்களுக்கான நவீன குடும்ப அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார்.
Samayam Tamil பிரசார வாகனம்


உலக வாசக்டமி தினம் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை சேலம் மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்ப நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராமன் கலந்துகொண்டு ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தையும், பேரணியையும் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முறைகள் மற்றும் பயன்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் பெற்றுக்கொண்டார்.

மேலும் உலக வாசக்டமி தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் சிறப்பு குடும்பநல கருத்தடை சிகிச்சை முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி பயன்பெறுமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்தடை சிகிச்சை செய்துகொள்ளும் நபருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1100 வழங்கப்படுவதாகவும், கடந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு முகாமில் 23 ஆண்கள் பயன் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி