ஆப்நகரம்

ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் கடத்திய 2 பேர் சுற்றிவலைப்பு: டிராக்டர் பறிமுதல்!

ஆத்தூர் அருகே வசிஷ்ட நதியில் அரசு அனுமதியின்றி மணல் கடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Samayam Tamil 22 Jul 2021, 7:30 am
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தம்பாடி வசிஷ்ட நதியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தப்பட்டு வருவதாக வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
Samayam Tamil ஆத்தூர் வசிஷ்ட நதியில் மணல் கடத்திய 2 பேர் சுற்றிவலைப்பு: டிராக்டர் பறிமுதல்!


இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் வசிஷ்ட நதிக்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது வசிஷ்ட நதியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக டிராக்டரில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரையை கையும் களவுமாக பிடித்தனர்.

சேலம் அரசு மருத்துவமனை உணவில் ஊழல்: ஒப்பந்தக்காரர் பகீர் புகார்!
தொடர்ந்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்தன்ர். அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி