ஆப்நகரம்

வேல் யாத்திரை...தமிழக அரசை கண்டித்த பாஜகவினர் கைது!

பாஜக வேல் ரத யாத்திரைக்கு முறையான அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து சேலத்தில் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Samayam Tamil 6 Nov 2020, 2:10 pm
பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று காலை பேரணியாக திருத்தணி சென்றார். இதனிடையே முருகனை கைது செய்ய போவதாக வெளியான தகவலையடுத்து சேலம் மாநகர பாஜக அலுவலம் முன்பு 150 க்கும் மேற்பட்ட அக்கட்சித் தொண்டர்கள் குவிந்தனர்.
Samayam Tamil பாஜக -சேலம்
வேல் யாத்திரை - பாஜக சேலம்


இந்த நிலையில் சேலம் பாஜக அலுவலகத்தில் இருந்து சேலம் மேற்கு மாவட்ட பார்வையாளரும், வேர்ல்டு ரதயாத்திரை கோட்டை பொறுப்பாளருமான கோபிநாத் தலைமையில் 150 மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திடீரென திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து காவல் துறையினர் அவர்களை கைது செய்தனர்.

சேலம்: செவ்வாய்ப்பேட்டை சந்தையில் வியாபாரிகள் உள்ளிருப்புப் போராட்டம்

அப்போது திடீரென பாஜக நிர்வாகிகளும், தொண்டர்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பாலத்தில் வேலுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கொட்டும் மழை என்றும் பாராமல் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அடுத்த செய்தி