ஆப்நகரம்

காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி; அடித்துச் சொல்கிறார் தமிழக எம்.பி!

இந்தியாவில் அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வருவது உறுதி என விஜய் வசந்த் எம்.பி கூறினார். மேலும் பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2021, 8:23 pm
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் வீட்டு உபயோக பொருள் விற்பனை நிலையத்தை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் இன்று துவக்கி வைத்தார்.
Samayam Tamil விஜய் வசந்த் எம்.பி பேட்டி
விஜய் வசந்த் எம்.பி பேட்டி


இதை தொடர்ந்து விஜய்வசந்த் எம்.பி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நீட் தேர்வு வேண்டாம் என்பதை அனைவரும் ஒருமனதாக வலியுறுத்தி வருகிறோம். தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒற்றைக்காலில் நின்று நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. நீட் தேர்வு காரணமாக தன்னம்பிக்கை இழந்து மருத்துவம் படிக்க வேண்டாம் என்ற நிலைக்கு மாணவர்கள் மாறி வருகின்றனர்.

ஒரே நாடு, ஒரே தேசம், ஒரே மொழி என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விலை உயர்வு அதிகரித்து மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.

தமிழகத்தை சூழ்ந்த அடுத்து ஆபத்து; அரசு விழிக்கலன்னா அழிவு நிச்சயம்!

மேலும் மத்தியில் ஆளும் பாஜக அரசை எதிர்த்து அனைவரும் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒரே அணியில் திரண்டு வருகின்றனர். பாஜக ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. வரும் 2024ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவது உறுதி. இவ்வாறு விஜய்வசந்த் எம்.பி கூறினார்.

அடுத்த செய்தி