ஆப்நகரம்

காதல் மனைவி தற்கொலை: அம்மா வீட்டுக்கு சென்றதால் மற்றொரு திருமணம், சேலத்தில் சோகம்!

வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டியில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 1 Aug 2021, 9:08 pm
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன். வயது 28. இவர் நெல் அறுவடை இயந்திரம் வைத்து சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார்.
Samayam Tamil காதல் மனைவி தற்கொலை: அம்மா வீட்டுக்கு சென்றதால் மற்றொரு திருமணம், சேலத்தில் சோகம்!


இவருக்கும் நாமக்கல் மாவட்டம் மெட்டாலா கோரையாறு பகுதியைச் சேர்ந்த சிந்தாமணி(25) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

திருமணமான முதல் ஆண்டிலேயே கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கணவரைப் பிரிந்து கடந்த 4 ஆண்டுகளாகத் தனது தாய் வீட்டில் சிந்தாமணி வசித்து வந்தார். இதையடுத்து கடந்த மாதம் சிந்தாமணியின் தாயார் உயிரிழந்த நிலையில், ஆதரவின்றி சிந்தாமணி தவித்து வந்துள்ளார்.

இந்த சூழலில் தனது கணவன் ஊரான பொன்னாரம் பட்டிக்குச் சிந்தாமணி சென்றுள்ளார். இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிந்தாமணியின் கணவர் மணிவண்ணன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சேவை நோக்கத்தோடு மருத்துவம் செய்யுங்கள்: மருத்துவர்களுக்கு பட்டமளித்து அரசு கல்லூரி முதல்வர் அறிவுரை!
இதனால் சிந்தாமணி-மணிவண்ணனிடையே அடிக்கடி வாய் தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் வெள்ளிக்கிழமை மாலை தனது வீட்டில் சிந்தாமணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சிந்தாமணி உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் இருகுடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி