ஆப்நகரம்

தற்கொலை செய்த 2 மாத மனைவியைச் சுடுகாட்டில் எரித்த கணவன்: சேலத்தில் குடும்பமே உறுதுணை!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jul 2021, 2:03 pm
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னமநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தனது சகோதரி தேனிலா என்பவரின் மகள் ராகவியைத் திருமணம் செய்துகொண்டார்.
Samayam Tamil தற்கொலை செய்த 2 மாத மனைவியைச் சுடுகாட்டில் எரித்த குடும்பம்: சேலத்தில் பரபரப்பு!


திருமணத்திற்குப் பின் தாய் மாமாவான தியாகராஜனைப் பிடிக்கவில்லை எனக் கூறி ராகவி அவருடன் குடும்பம் நடத்த மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. திருமணமாகி 2 மாதங்களே ஆகும் நிலையில், அவ்வபோது அவர்களை குடும்பத்தினர் சமரசம் செய்து சேர்த்து வைத்து வந்துள்ளனர்.

இந்த சூழலில் சின்னமநாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் சுஜாதா வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதில், “திருமணமான 2 மாதத்தில் குடும்ப தகராறு காரணமாக ராகவி என்பவர் கடந்த ஜூலை 20ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து காவல்துறைக்குத் தெரிவிக்காமல் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சடலத்தை எரித்து விட்டனர்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மோடி அரசு அமைந்தவுடன் அனைத்து துறைகளும் தனியாருக்குச் செல்கிறது: அஞ்சல் ஊழியர்கள் சேலத்தில் கொந்தளிப்பு!
இதன் பேரில் காவல் ஆய்வாளர் சுகுமார் உதவி ஆய்வாளர் உதயகுமார் ஆகியோர் விசாணை நடத்தினர். அதில் ராகவி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இது குறித்து முறையாக காவல்துறைக்குத் தெரிவிக்காமல் அவரது உடலை பள்ளத்தாதனூர் மயானத்திற்கு எடுத்துச் சென்று எரித்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ராகவியின் தந்தை வாழப்பாடி வைத்தி, தாய் தேன் நிலா, கணவர் தியாகராஜன் உள்பட உடலைச் சுடுகாடு கொண்டு சென்று எரிக்க உதவியாகவிருந்த உறவினர்கள் மீது காவல்துறையினர் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். திருமணமான 2 மாதத்தில் ராகவி உயிரிழந்தது தொடர்பாக தெரியவந்து கோட்டாட்சியர் விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் மாவட்டத்தில் அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது.

அடுத்த செய்தி