ஆப்நகரம்

கிணற்றில் விழுந்த காட்டெருமைகள்... மீட்புப்பணி தீவிரம்

வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டெருமை கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர்.

Samayam Tamil 31 Dec 2020, 6:31 pm
ஆத்தூர் அருகே உள்ள பனமடல் கிராமத்தில் விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டெருமைகள் பயிர்களை சேதப்படுத்தின. அவற்றை வனப்பகுதிக்கு விரட்ட முயன்ற போது இரண்டு காட்டெருமைகள் கிணற்றில் தவறி விழுந்த நிலையில், மீட்பு பணியில் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
Samayam Tamil எருமை மீட்பு


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே உள்ள தும்பல் கிராமத்தில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர்களில், நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில், க ல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டெருமைகள் கூட்டமாக வந்து விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வருவது வழக்கம்.

அதே போல் இன்று கல்வராயன் மலை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமைகள் பனமடல் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் தோட்டத்தில் உள்ள நெல் மற்றும் கரும்பு பயிர்களை சேதப்படுத்தியுள்ளது.

பச்சை துண்டு பழனிசாமியா பச்சை துரோகப் பழனிசாமியா? கனிமொழி கேள்வி

இதையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துளையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் காட்டெருமை கூட்டங்களை வனப்பகுதிக்கு விரட்ட முயன்றனர். அப்போது 2 காட்டெருமைகள் அங்குள்ள விவசாய கிணற்றுக்குள் தவறி விழுந்தது.

இதனையடுத்து ஆத்தூர் மற்றும் வாழப்பாடி தீயணைப்புத்துறையினரை வரவழைத்து கிணற்றுக்குள் விழுந்த 2 காட்டெருமைகளையும் மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்,

அடுத்த செய்தி