ஆப்நகரம்

பேருந்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய பெண்கள்; சுற்றி வளைத்த பொதுமக்கள்.. மானாமதுரையில் பரபரப்பு!

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்தில் பெண்ணிடம் இருந்து நகையை திருடிய இரு பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Sep 2022, 3:02 pm

ஹைலைட்ஸ்:

  • மானாமதுரை பேருந்து நிலையத்தில் பேருந்தில் நகை திருட முயன்ற பெண்கள்
  • பெண்ணிடம் கைவரிசை காட்டிய பெண்கள்
  • விரட்டிப் பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நகையை திருடிய இரு பெண்கள் கைது
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மாலா தனது தங்கை மகள் பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்காக சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்ததவள்ளி நகரில் வசித்து வரும் தங்கை விட்டில் பிறந்த நாள் விழாவை கொண்டாடிவிட்டு, திருநெல்வேலி செல்வதற்காக மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார்.
அப்பொழுது இவர்கள் பின்புறமாக வந்த இரண்டு பெண்கள் மாலாவின் கை பையில் வைத்திருந்த ஒன்றரை சவரன் நகையை திருட முயற்சித்துள்ளனர். இதை பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி வரும் நபர் ஒருவர் பார்த்து சத்தம் போடவே அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் நகை திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்களையும் விரட்டி பிடித்து மானாமதுரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தேசிய கல்வி கொள்கையில் தமிழக அரசு முரண்பாடு? ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கைகள்!

இதனை அடுத்து மானாமதுரை போலீஸார் நடத்திய விசாரணையில் நகை திருட்டில் ஈடுபட்டவரகள் மதுரையைச் சேர்ந்த வள்ளி மற்றும் அறந்தாங்கியைச் சேர்ந்த லட்சுமி என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் மானாமதுரை போலீசார் மாலா அளித்த புகாரின் பேரில் இரு பெண்களையும் கைது செய்து விசாரணை செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி