ஆப்நகரம்

தமிழக முழுவதும் போலீசார் விடுமுறையின்றி பணியாற்ற உத்தரவு; திருப்புவனம் எஸ்ஐ பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு!

திருப்புவனம் காவல் நிலையத்தில் துணைக் காவல் ஆய்வாளராக பணிபுரியும் சந்தான ராஜ் என்பவர் பேசிய ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Sep 2022, 11:19 am

ஹைலைட்ஸ்:

  • தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சால் பாதுகாப்பு பணிக்காக அனைத்து போலீசாரும் விடுமுறையின்றி பணிபுரிய உத்தரவு
  • திருப்புவனம் காவல் நிலைய துணை காவல் ஆய்வாளர் பேசிய ஆடியோ
  • ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil எஸ்.எஸ்.ஐ. சந்தானராஜ்
தமிழகம் முழுவதும் காவல்துறையில் வார ஓய்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் தொடர் பெட்ரோல் குண்டு வீச்சால் பாதுகாப்பு பணிக்காக அனைத்து போலீசாரும் விடுமுறையின்றி பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் போலீசார் மாற்றுப் பணியாக அனுப்பப்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்தில் பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ. சந்தானராஜ். இவர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் எனது மகளுக்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளேன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டில் இருந்து எனது மகளை பெண் பார்த்துவிட்டு பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். இதனைத்தொடர்ந்து நாங்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு நாள் குறிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை செல்வதாக முன்கூட்டியே முடிவு செய்து மாப்பிள்ளை வீடு பார்க்க வேன் ‘புக்’ செய்துவிட்டு சொந்த பந்தங்களுக்கு அனைவருக்கும் சொல்லி அனுப்பி விட்டேன்.

இந்நிலையில் கோவைக்கு பாதுகாப்பு பணிக்கு செல்லும்மாறு கூறினார்கள். ஆனால் அன்று என்னுடைய முறையல்ல‌. ஆகவே இன்னொரு எஸ். எஸ். ஐ அனுப்புமாறு கேட்டேன். ஆனால் காவல் நிலைய ஆய்வாளர் ஆதிலிங்கம் போஸ் இல்லை நீங்கள் தான் போக வேண்டும் என்று வற்புறுத்தினார். இதனால் மன உளைச்சல் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் சுபகாரியம் தடைபற்று விட்டது.

நவராத்திரி விழா; வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சிவகங்கை அரண்மனை.. கலை நிகழ்ச்சியுடன் கோலாகல துவக்கம்!

வேறுவழியின்றி நான் பாதுகாப்பு பணிக்காக கோவைக்கு சென்றேன். இத்தனை வருடங்களாக காவல்துறையில் பணிபுரிந்து எந்த ஒரு பயனும் இல்லை. சொந்த மகள் நிச்சயதார்த்தத்தை கூட முறையாக செய்ய முடியவில்லை. எந்தவொரு அட்ஜெஸ்மென்டும் இல்லை. டிபார்ட்மென்ட்க்கு நம்ம வேலை பார்த்து சர்வீஸ் பண்ணி என்ன புண்ணியம்’ என நொந்து பேசியுள்ளார். மேலும் அப்புறம் ஏன் காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் தற்கொலை செய்ய மாட்டார்கள் என்று ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி