ஆப்நகரம்

சிறிய குழந்தைகளை 4 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்: தேவக்கோடையில் அதிர்ச்சி!

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் தெரு நாய் கடித்து 4 பள்ளி குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 24 Sep 2021, 10:33 pm
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர்ப் பகுதியில் தெரு நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிகின்றன. இந்த தெரு நாய்கள் மாடு ஆடுகளைக் கடித்து தொல்லை கொடுத்து வருகிறது.
Samayam Tamil சிறிய குழந்தைகளை 4 பேரை கடித்து குதறிய தெருநாய்கள்: தேவக்கோடையில் அதிர்ச்சி!


இதன் தொடர்ச்சியாக கீழ குடியிருப்பு அருகே வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ரமேஷ் மகன் 5 வயது சிறுவன் தஸ்வின், குழந்தைச்சாமி மகன் கௌசிக் ராஜா(5), செல்லத்துரை மகன் கோகுல்(5), செந்தில்குமார் மகன் குரு சிவா(6) நான்கு பள்ளி மாணவர்களை கை, கால், இடுப்பு, தொடைப் பகுதிகளில் கடித்துக் குதறியது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று நாய்களை அடித்து விரட்டி குழந்தைகளைக் காப்பாற்றிப் பலத்த காயமடைந்த குழந்தைகளைப் பெற்றோர்கள் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பெண் உள்பட 8 பேருக்கு வெட்டு; தலைதறிக்க ஓடிய பொதுமக்கள்!
இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் தெரு நாய்கள் ஆடு, மாடுகளைக் கடித்து வந்த நிலையில் தற்போது குழந்தைகளைக் கடித்தது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறனர். இதுகுறித்து பலமுறை தேவகோட்டை பகுதிகளில் நாய் தொல்லை அதிகம் இருப்பதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளனர். நாய்களைப் பிடிக்கக் கூடாது என்று உத்தரவு உள்ளதாகக் கூறி அரசு அதிகாரிகள் அலட்சியமாகப் பதில் அளிப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


நாய்கள் இனப்பெருக்கம் அதிகமாவதைத் தடுக்க நாய்களுக்குக் கருத்தடை ஊசி போட்டு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உண்மை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில் அரசு உடனடியாக தலையிட்டு உரியத் தீர்வு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி