ஆப்நகரம்

மாறி மாறி தாக்கிக்கொண்ட ஆண்கள், பெண்கள்.. சிவகங்கையில் பரபரப்பு

திருப்பாச்சேத்தி அருகே இரு தரப்பினர் கம்பு, கட்டைகளால் தாக்கி கொண்டதால் பரபரப்பு

Samayam Tamil 28 Nov 2022, 7:15 pm
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கம்பு, கட்டைகளால் மாறி, மாறி தாக்கிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil sivagangai


சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ளது வைகை மீனாட்சிபுரம் கிராமம். இக்கிராமத்தில் உறவினர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு கோஷ்டிகளாக பிரிந்து ஆண்களும், பெண்களும் கட்டை, கம்பு, கற்களால் தாக்கிக் கொண்டனர்.

இதில் ராமன் (70) ஜெயகொடி (60) முனியாண்டி (30) இதீகா (14). பஞ்சவர்ணம் (60) உள்ளிட்ட 7 பேர் பலத்த காயமடைந்து சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி