ஆப்நகரம்

ஸ்டாலின் லெட்டர் எழுதினால் என்ன? எழுதாவிட்டால் என்ன?.. நக்கலடித்த எச். ராஜா!

ஸ்டாலின் கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் தமிழக மீனவர்களை மத்திய அரசு மீட்கும் என எச் ராஜா தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Jul 2022, 7:22 pm
ஸ்டாலின் கடிதம் எழுதினாலும் எழுதாவிட்டாலும் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மத்திய அரசு எப்படியும் வெளியே கொண்டு வந்து விடும் என காரைக்குடியில் எச். ராஜா பேட்டியளித்துள்ளார்.
Samayam Tamil எச் ராஜா


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஐந்து விளக்கு அருகே பாஜக மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ‌எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: "தங்கள் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள கருவியை கொண்டு மீன்பிடிப்பதால் தான் தமிழக மீனவர்களை கைது செய்கிறோம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஸ்காலர்ஷிப் வேணுமா?.. நீங்க பண்ண வேண்டியது இதுதான்!

மத்திய அரசின் ஆட்சி, ஆளுமை தன்மை மற்றும் அதன் திறமைதான் உக்ரைன் போரில் சிக்கிக்கொண்ட தமிழக மருத்துவ மாணவர்களை பத்திரமாக மீட்டு வந்தது. மத்திய அரசு செய்ததை, தங்கள் அரசு செய்ததாக காட்டிக் கொள்வது தான் மு.க ஸ்டாலினுடைய பழக்கம்.

2026 வரை பதவியில் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்டாலின் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி