ஆப்நகரம்

கால்வாய் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முத்துக்கிருஷ்ணனுக்கு அண்ணா பதக்கம்!

கால்வாய் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட முத்துக்கிருஷ்ணனுக்கு அண்ணா பதக்கம் இதனால் அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் பெருமிதம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 28 Jan 2022, 6:20 pm
குடியரசு தினத்தன்று தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்டது.
Samayam Tamil கோப்புப் படம்


இதில் மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனுக்கும் வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம்அருகே மதுரை இரம்மேஸ்வரவம் நான்கு வழி சாலையில் கடந்த நவம்பர் மாதம் 8 ஆம் தேதிமானாமதுரை பகுதியில் வசிக்கும் கணவர், மனைவி, 2 குழந்தைகள், ஒரு முதியவர் என 5 பேர் காரில் மதுரையில் இருந்து ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை: எச்சரித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர்!
அப்போது திருப்புவனம் அடுத்த லாடனேந்தல் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து மாரநாடு கால்வாய்க்குள் விழுந்தது. 6 அடி ஆழம் இருந்த அந்த கால்வாயில், தண்ணீரின் வேகம் அதிகமாக இருந்தது. காருக்குள் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தனர்.

அப்போது அதே வழியாக திருப்புவனம், வடகரையைச் சேர்ந்த தனியார் நிறுவன டிரைவர் முத்துக்கிருஷ்ணன் கால்வாயில் கார் கவிழ்ந்து கிடந்ததை பார்த்து உடனடியாக தனது காரை நிறுத்திவிட்டு தண்ணீரில் இறங்கி சென்று காருக்குள் சிக்கி இருந்த 5 பேரையும் ஒவ்வொருவராக காப்பாற்றினார்.
அரசு மருத்துவமனையில் புகுந்த பாம்பு; அலறி அடித்து ஓடிய நோயாளிகள்!
இதை முத்துக்கிருஷ்ணனின் நண்பர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கினர்.

இந்நிலையில் குடியரசுத் தினத்தையொட்டி, வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது கால்வாயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணனுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கதை முதல்வர் வழங்கினார். அத்துடன், ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி