ஆப்நகரம்

தமிழக இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறுவது சுத்த பொய் - கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்!

தமிழக இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறுவது சுத்த பொய் எனவும், இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனவும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Nov 2022, 7:46 pm

ஹைலைட்ஸ்:

  • தமிழக இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறுவது சுத்த பொய்
  • இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்
  • சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் ஓப்பன் டாக்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நடைபெற்ற மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில், தமிழக இளைஞர் காங்கிரஸில் 12 லட்சம் உறுப்பினர்கள் உள்ளதாக கூறுவது சுத்த பொய் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. இதில் ப. சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து இரண்டு முறை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்த சுந்தரத்தை, இளைஞர் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பிரவீன் தவறாக பேசினார். இதனை மேடையில் இருந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் தட்டிக் கேட்காததை கண்டித்து, காரைக்குடி இளைஞர் காங்கிரஸ் தலைவர் முகநாத், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சேது மெய்யப்பன், மானாமதுரை சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனை ராஜ் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.


தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக வர விருப்பம் தெரிவித்துள்ள கார்த்திக் ப. சிதம்பரம் உள்ளூர் தொகுதியில் கோஷ்டி பூசலை தடுக்காமல், வளர்த்து விடுபவர் தலைவர் ஆவதற்கு தகுதியில்லை என காங்கிரஸ் கட்சியினர் புலம்பியவாரு சென்றனர். அதன் பின்பு மேடையில் பேசிய கார்த்திக் சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கட்சியில் இளைஞர் காங்கிரஸ் 12 லட்சம் உறுப்பினர்கள் என்பது சுத்த பொய். இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று பேசினார். மற்ற கட்சிகளும் இது போல் தான் உறுப்பினர்கள் எண்ணிக்கையை பொய் கூறி வருகின்றனர் என்று மறைமுகமாக குற்றம் சுமத்தினார்.

மத்திய அரசு விவசாய நிதியை ஏன் குறைக்கணும்?.. ஊழல் நடந்திருக்கிறதா?.. அன்புமணி சரமாரி கேள்வி!

இந்நிலையில் நான்கு முறை திருவாண்டனை சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. ஆர். ராமசாமியையும், தற்போதைய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் அவர்களையும் ஓரம் கட்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் முயற்சி செய்வதாக காங்கிரஸ் கட்சியின் குழுவின் நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர். ராமசாமியின் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி