ஆப்நகரம்

3 கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை; மானாமதுரை எம்எல்ஏ துவக்கி வைப்பு!

மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிராமங்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையான பஸ் போக்குவரத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்.‌

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Sep 2022, 1:32 pm

ஹைலைட்ஸ்:

  • மானாமதுரையில் மூன்று கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கை
  • மானாமதுரை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 3 கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து
  • மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்தார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பஸ் போக்குவரத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் துவங்கி வைத்தார்.‌
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி துவக்கி வைத்தார்.

மானாமதுரை அருகே உள்ள திருப்பாச்சேத்தி,‌ மேலநெட்டுர், குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பேருந்து போக்குவரத்து வேண்டி பொதுமக்கள் 10 வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையடுதது பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இன்று மானாமதுரை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் திருப்பாச்சேத்தி,‌ மேலநெட்டுர், குவளைவேலி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்தை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி துவக்கி வைத்து பொதுமக்களுடன் சேர்ந்து பஸ்ஸில் சென்றார்.‌

தமிழகம் முழுவதும் பணிகள் தீவிரம்; உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அதிரடி!

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட கழகத் துணைச் செயலாளர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை ஒன்றிய குழு தலைவர் லதா அண்ணாதுரை ஆகியோர் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி