ஆப்நகரம்

சிவகங்கை: மஞ்சுவிரட்டு போட்டியில் காயமடைந்த மாடுபிடி வீரர் உயிரிழப்பு!

கல்லல் அருகே மேல மாகாணம் கோவில் திருவிழாவை யொட்டி நடைபெற்ற வட மாடு மஞ்சு விரட்டு போட்டியில் மாடுபிடி வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Curated bySrini Vasan | Samayam Tamil 27 Jun 2022, 4:01 pm

ஹைலைட்ஸ்:

  • சிவகங்கை கல்லல் அருகே மஞ்சுவிரட்டு போட்டி
  • மாடுபிடி வீரர் உயிரிழப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil மாடுபிடி வீரர் உயிரிழப்பு
தமிழகத்திலேயே சிவகங்கை மாவட்டத்தில் தான் அதிகளவு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு உள்ளிட்ட பாரம்பரிய போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கல்லல் அருகே மேல மாகாணம் கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

வட்ட வடிவ மைதானத்தின் நடுவே கயிற்றால் கட்டப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க வேண்டும். ஒவ்வொரு காளையையும் அடக்க 9 மாடுபிடி வீரர்கள் களம் இறங்க வேண்டும். மேலும், காளைகளை 25 நிமிடத்திற்குள்
அடக்க வேண்டும் என்ற நிலையில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் காளைகளை அடக்கினால் வீரர்கள் வெற்றி பெற்றதாகவும்,
அடக்க தவறினால் காளைகள் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இன்று நடைபெற்ற போட்டியில் மொத்தம் 14 காளைகள் பங்கேற்ற நிலையில்,126 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க களமிறங்கினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 5 மாடுகள் பிடி மாடுகளாக அறிவிக்கப்பட்டது.

இப்போட்டியை சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த 1500 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உற்சாகமாக கண்டுகளித்தனர்.

போட்டியின் போது காளைகள் முட்டியதில் 5 ற்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயமடைந்த நிலையில், திருச்சி மாவட்டம் மருங்காபுரியை சேர்ந்த அழகர்சாமி என்ற மாடுபிடி இளைஞர் மாடு முட்டியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி