ஆப்நகரம்

முதலாளியை சந்திக்க டெல்லி சென்றுள்ளார் ஓபிஎஸ்... கார்த்தி சிதம்பரம் 'நச்' பதில்..!

முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக ஓ. பன்னீர்செல்வம் டெல்லி சென்றுள்ளதாக கார்த்தி பா. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 25 Jun 2022, 11:47 am

ஹைலைட்ஸ்:

  • அக்னிபாத் ஒரு விபரீதமான திட்டம்
  • கட்சி முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்த முதல் அரசியல் கட்சி அதிமுக
  • முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாடாளுமன்ற உறுப்பினர்  கார்த்திக் ப. சிதம்பரம்
தாங்கள் கட்சி முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்த முதல் அரசியல் கட்சி அதிமுக என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் ப. சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.
கவியரசு கண்ணதாசன் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்த ஊரான சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டியில் அவரது திருஉருவசிலைக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்திக் சிதம்பரம் கூறியதாவது: "தமிழகத்தில் பாரதியாருக்கு பின்னர் தனது கவிதைகளால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, தமிழுக்கு பெருமை சேர்த்தவர் கவியரசு கண்ணதாசன் என்று புகழாரம் சூட்டினார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மத்திய அரசு பாதிக்கப்படுபவர்களை கலந்தாலோசிக்காமல் முடிவுகளை அறிவிப்பதாக குற்றம் சாட்டியவர், அக்னிபாத் ஒரு விபரீதமான திட்டம் என்றும், இதனால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என எச்சரித்தார். பஞ்சாப் தேர்தலுக்காக வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றதை போல், அக்னிபத் திட்டத்தை வாபஸ் வாங்குவார்கள் என நம்பிக்கை தெரிந்தார்.

சிவகங்கையில் தகராறு செய்த சிவகங்கை போலீஸ் - தட்டி கேட்ட எஸ்ஐ மண்டை உடைப்பு

மேலும் தாங்கள் கட்சி முன்மொழிந்த தீர்மானத்தை நிராகரித்த முதல் அரசியல் கட்சி அதிமுக தான்.‌ அதிமுக முன்னர் ஒற்றை தலைமையின் கீழ்தான் செயல்பட்டு வந்தது. தற்போது அந்த திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலாளியை சந்தித்து ஆலோசனை பெறுவதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார்" என கார்த்திக் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி