ஆப்நகரம்

மகிலான்பட்டி பூங்குன்ற நாயகி அம்மன் கோவில் உண்டியல் கொள்ளை... போலீசுக்கு தண்ணி காட்டும் கொள்ளையன்!

கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி கோவிலில் உண்டியலை உடைத்து நகை பணம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 May 2022, 6:28 pm

ஹைலைட்ஸ்:

  • கணியன் பூங்குன்றனார் பிறந்த ஊரான மகிபாலன்பட்டி
  • மகிபாலன்பட்டியில் உள்ள அருள்மிகு பூங்குன்றநாயகி அம்மன் திருக்கோவில்
  • கோவிலில் உண்டியலை உடைத்து நகை பணம் திருட்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே "பூங்குன்றன் நாடு" என்று அழைக்கப்படும் மகிபாலன்பட்டியில் உள்ள அருள்மிகு பூங்குன்றநாயகி அம்மன் திருக்கோவில் கோவில் உள்ளது. இச்சுற்றுப் பகுதிகளில் உள்ள 24 கிராமங்களுக்கு சொந்தமாக திகழ்ந்து வரும் இக்கோவிலில் அம்மன் வடக்கு முகமாக காட்சியளிப்பது சிறப்பு.
இந்நிலையில் நேற்று இரவு கோவிலில் பூஜை நடத்தி விட்டு மாலை 8 மணியளவில் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி சென்றுள்ளார். வழக்கம்போல் இன்று அதிகாலையில் கோவிலை திறந்து பார்க்கும் போது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் சிதறிக் கிடந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பூசாரி கோவில் அறங்காவலருக்கு தகவல் தெரிவிக்க உடனடியாக கோவில் அறங்காவலர் செல்லையா கண்டவராயன்பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த காவல்துறையினர் உண்டியல் உடைப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் திருட வந்த நபர் ஆக்ஸாபிளேடு கொண்டு பூட்டை அறுத்து உண்டியலை உடைத்துள்ளது தெரியவந்தது. அதனை அடுத்து மாவட்ட கைரேகை நிபுணர்கள், மற்றும் மோப்ப நாய் உதவிகொண்டு தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இக்கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் 24 அரை கிராம மக்களும் நேர்த்திக்கடனாக தங்கத்தில் தாலி, வெள்ளியில் கண், கும்பம் போன்ற நகைகளையும் இக்கோவிலில் செலுத்துவார்கள். அதனால் கண்டிப்பாக உண்டியலில் நகைகள் பணம் அதிகமாக இருக்கும். எனவே இது திருடு போய் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என கிராம மக்கள் கூறிவருகின்றனர்.‌

கடந்த பத்து மாதத்திற்கு முன்பாக இதே போல் திருட்டு நடைபெற்ற நிலையில் அது குறித்த விசாரணைை நடைபெற்று வந்து. இந்த நிலையில் அதே போல் மறுபடியும் திருட்டு நடைபெற்று இருப்பது இப்பகுதி கிராம மக்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர். இக்கோவிலில் சிசிடிவி கேமரா முதலிய கண்காணிப்பு சாதனங்கள் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக திருடர்கள் இவ்வளவு துணிச்சலாக செயல்பட்டு வருவது காவல் துறைக்கு திருடர்களை கண்டுபிடிப்பதில் பெரும் சவாலாக இருந்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி