ஆப்நகரம்

தாய், மகள் கொலை.. திருமண நகைகள் கொள்ளை... பேத்திக்காக கைகோர்த்த கிராமம்

சிவகங்கை அருகே தாயையும், பாட்டியையும் கொலை செய்துவிட்டு திருமணத்துக்கு வைத்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்ற கும்பல்

Samayam Tamil 14 Jan 2023, 4:05 pm
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டையில் வசித்து வருபவர் குமார். இவரது மனைவி வேலுமதி. குமார் மலேசியாவில் வேலை பார்த்து வரும் நிலையில் வேலுமதி கண்ணங்கோட்டையில் உள்ள அவரது தாயார் வீட்டில் மகன் பூவரசனுடன் வசித்து வந்தார்.
Samayam Tamil sivagangai news


இந்நிலையில், இன்று அதிகாலை அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் வேலுமதியை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அதை தடுக்க வந்த அவரது தாயார் கனகம் மற்றும் அவரது மகன் பூவரசன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டி வீட்டிலிருந்த நகைகளை திருடி தப்பிச் சென்றுள்ளனர். இதில் தாய் கனகமும் உயிரிழந்தார்.

தப்பிச் சென்ற கொலையாளிகள் வீட்டைச் சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டும் சென்ற நிலையில், காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் வேறொரு உணர்ச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது. கொலை செய்யயப்பட்ட வேலுமதி வீட்டிலிருந்த 40 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. அந்த நகைகள் வேலுமதியின் தாய் கனகத்தின் பேத்தி திருமணத்திற்கு வைத்திருந்த நகைகள் ஆகும்.

நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதால் திருமணம் நடைபெறுமா என்று கேள்விக்குறி எழுந்துள்ள நிலையில் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணத்தை நடத்துவதற்கு நகை பணம் வழங்கி வருகின்றனர். இதில் அதிமுக மாவட்டச் செயலாளரும் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினருமான பி ஆர் செந்தில்நாதன், காங்கிரஸ் கே. ஆர். ராமசாமி மற்றும் ஐந்து நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி