ஆப்நகரம்

சொந்த வீடு இல்லையா?; உடனே வாங்கிக்கோங்க!

சொந்த வீடு இல்லையா? உடனே விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

Samayam Tamil 29 Jun 2022, 5:59 pm
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மதுரை கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் சிவகங்கையை அடுத்த பையூர் பிள்ளைவயல் பகுதியில் 608 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இந்த திட்டத்தில் கட்டப்படும் வீடுகள் சிவகங்கை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்களின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் வாயிலாக பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், நகர்ப்புறத்தில் வசிக்கும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கு செலவுத்தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும்.

அதிமுகவில் இருந்து எடப்பாடி நீக்கம்; தலைமைக்கழகம் பெயரில் போஸ்டர்!

இந்த திட்டத்தின் கீழ் வீடுகள் பெற விரும்பும் சிவகங்கையை பகுதியை சேர்ந்தவர்கள் இந்தியாவில் தனது பெயரிலோ அல்லது தனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை என்ற சான்று மற்றும் மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்கு மிகாமலும் உள்ளது என்ற சான்று அளிக்க வேண்டும்.

இங்கு வீடுகள் பெற விரும்புவர்கள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவருடைய ஆதார் மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பிள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் இன்று மற்றும் நாளை 30ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையில் நடக்கும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

வெல்லமண்டி புதிய ப்ளான்; குழம்பி தவிக்கும் எடப்பாடி!

இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரத்துக்கு கேட்பு காசோலை Executive Engineer PIU Madurai என்ற பெயரில் எடுத்து பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2 எண்ணம், குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்பு தொகையில் வரவு வைக்கப்பட்டு மீத தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும் பொழுது பயனாளிகள் செலுத்த வேண்டும். இவ்வாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி