ஆப்நகரம்

அரசு மருத்துவமனையில் ஒரு அதிசயம்; ஸ்டேண்டே இன்றி நிற்கும் குளுக்கோஸ்!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஸ்டேண்டே இல்லாமல் குளுக்கோஸ் பாட்டிலை நூதனமாக நிறுத்தி மருத்துவ ஊழியர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அதிசயம் அரங்கேறி வருகிறது. இதனை பலரும் ஆர்வமுடன் வந்து பார்த்தபடி செல்கின்றனர்.

Samayam Tamil 26 Sep 2021, 9:35 am

ஹைலைட்ஸ்:

  • அரசு மருத்துவமனையில் ஓர் அதிசயம்
  • ஸ்டேண்டே இன்றி நிற்கும் குளுக்கோஸ்
  • மருத்துவ ஊழியர்கள் சூப்பரான ஐடியா
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். உள்நோயாளிகளாக 700க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.
இங்குள்ள ஒருசில வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் ஸ்டாண்ட் இல்லை. மேலும் பல வார்டுகளில் குளுக்கோஸ் ஏற்றும் வகையில் மேற்கூரையில் அமைக்கப்பட்டிருந்த கொக்கிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன.

மேலும் அறுவை சிகிச்சைக்கு பிறகு நோயாளிகளுக்கு அடிக்கடி குளுக்கோஸ், மருந்துகள் ஏற்றப்படும். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு அனுமதிக்கப்படும் பெண்கள் வார்டில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் இல்லாததால் குளுக்கோஸ் பாட்டில்களை உறவினர்களை கையில் பிடிக்க சொல்லி நோயாளிகளுக்கு ஏற்றுகின்றனர்.

இவ்வாறு நீண்டநேரம் கைகளை தூக்கியபடி குளுக்கோஸ் பாட்டில்களை பிடிக்க உறவினர்கள் சிரமப்படுகின்றனர். இதனால் அனைத்து வார்டுகளிலும் தேவையான குளுக்கோஸ் ஸ்டாண்டுகளை வைக்க வேண்டுமென நோயாளிகளும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஹரி நாடார் விடுதலையாவது சிக்கல்; செல்லிலேயே சிதைய போகும் சிங்கம்!

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘மேற்கூரைகளில் இருக்கும் கொக்கிகள் சேதம் அடைந்து உள்ளன. இதனால் அவசரமான நேரங்களில் உறவினர்களை பிடிக்க சொல்லும் நிலை ஏற்படுகிறது. ஆனால் மற்ற நேரங்களில் வேறு வார்டுகளில் உள்ள ஸ்டாண்டுகளை பயன்படுத்துகிறோம்’ என்று கூறினர்.

அடுத்த செய்தி