ஆப்நகரம்

சிவகங்கை: சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் டாஸ்மாக் மூடல்... கடையை திறக்க கோரி பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை திறக்க கோரி பணியாளர்கள் பையூர் மண்டல மேலாளர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 28 Apr 2023, 1:17 pm

ஹைலைட்ஸ்:

  • சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் அரசு மதுபான கடை மூடல்
  • டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
  • அரசு மதுபான கடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்
உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள்
சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய வீதியில் செயல்பட்டுவந்த டாஸ்மாக் கடை சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக மூடப்பட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து டாஸ்மாக் பணியாளர்கள் மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை

சிவகங்கையின் முக்கிய வீதியாக இருப்பது நேருபஜார் பகுதியாகும். இங்கு டாஸ்மாக் அரசு மதுபான கடையும், தனியார் மதுபான கடையும் அருகருகே செயல்பட்டு வந்தது. பொதுமக்கள் அதிகம் நடமாட கூடிய பகுதியில் இருக்கும் அந்த இரு மதுபான கடைகளாலும் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.

உயிரிழப்பு

மேலும் கடந்த மாதம் அப்பகுதியில் மது அருந்திவிட்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள், நடந்து சென்றவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த இரு கடைகளையும் அகற்ற கோரி இறந்தவரின் உடலுடன் போராட்டம் நடத்தினர்.

அரசு மதுபான கடை மூடல்

ஆவேசமடைந்த பெண்கள் அரசு மதுபான கடை மீது கல்லெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, அந்த அரசு மதுபான கடை மூடப்பட்டது. ஆனால் தனியார் மதுபான கடை மட்டும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது.
சிவகங்கையில் மஞ்சுவிரட்டில் மாடு முட்டி இருவர் பலி - கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த போட்டியில் அசம்பாவிதம்
டாஸ்மாக் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

இந்நிலையில் அரசு மதுபான கடையை மட்டும் மூடியதை கண்டித்து டாஸ்மாக் பணியாளர்கள் சிவகங்கை பையூரில் உள்ள மண்டல மேலாளர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுபான கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்றால் இரு கடைகளையும் மூடாமல் தனியார் மதுபான கடையை மட்டும் திறப்பது எந்த விதத்தில் நியாயம் என்றும், அரசு மதுபான கடையை மூடினால் தனியார் மதுபான கடைக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்பதால் சிலர் சுய நலத்துடன் செயல்படுகின்றனர்.

அதிகாரிகளும் அவர்களுக்கு துனை போவதாக கூறி, அரசு மதுபான கடையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி