ஆப்நகரம்

நவராத்திரி விழா; வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் சிவகங்கை அரண்மனை.. கலை நிகழ்ச்சியுடன் கோலாகல துவக்கம்!

சிவகங்கை அரண்மனையில் நவராத்திரி விழா கலை நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Sep 2022, 12:55 pm

ஹைலைட்ஸ்:

  • சிவகங்கை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவில்
  • பாரம்பரியமாக நடைபெறும் ஒன்பது நாள் நவராத்திரி திருவிழா
  • நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப் பட்டுள்ளது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கலை நிகழ்ச்சியுடன் கோலாகல துவக்கம்
சிவகங்கை அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் நவராத்திரி திருவிழா இன்று துவங்கியது. பாரம்பரியமாக ஒன்பது நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
இதில் சிவகங்கை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வந்தது சுவாமி தரிசனம் செய்து, அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகளை ஆர்வத்துடன் கண்டுகளிப்பார்கள். மேலும் அரண்மனை நடுவே உள்ள திடலில் பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு நாள்தோறும் கலை, இலக்கிய, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். முதல் நாள் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பரதநாட்டியம் மற்றும் பாடல் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

பேருந்தில் பெண்ணிடம் கைவரிசை காட்டிய பெண்கள்; சுற்றி வளைத்த பொதுமக்கள்.. மானாமதுரையில் பரபரப்பு!

நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு அரண்மனை முழுவதும் வண்ண விளக்குகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி திருவிழா அன்றுதான் வீரமங்கை வேலுநாச்சியார் ஆயுதக் கிடங்கில் மனித வெடிகுண்டினை வெடிக்க செய்து, தான் இழந்த ராஜ்ஜியத்தை ஆங்கிலேயரிடம் இருந்து மீட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி