ஆப்நகரம்

ஓ மை காட்; அதிர்ச்சியிலும் நிம்மதி பெருமூச்சு விடும் சிவகங்கை மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று. நேற்று மட்டும் 138 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்.

Samayam Tamil 21 Jan 2022, 9:11 pm
தமிழகத்தில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கையால் மக்களும், அரசு அதிகாரிகளும் முழித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
Samayam Tamil கோப்பு படம்



இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க முககவசம் உயிர் கவசம் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் 2வது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மாவட்டத்தில் மூன்று நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வரும் வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காரைக்குடி, திருப்பத்தூர் மானாமதுரை, திருப்புவனம், காளையார்கோவில் ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சிகிச்சை பெற்று வந்த 89 பேர் குணமடைந்து தற்போது வீடு திரும்பியுள்ளனர்.
அரசு அறிவிப்பு: வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!
கொரோனா தாக்கி அரசு ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனை, வீட்டு தனிமையில் உள்ளவர்கள் உள்பட 653 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனா தொற்றுக்கு இறப்பு எதுவும் இல்லை என சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். ஒரு பக்கம் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும் குணமடைவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தும், இறப்பு எண்ணிக்கை பூஜ்யத்தில் இருப்பதால் சிவகங்கை மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

அடுத்த செய்தி