ஆப்நகரம்

மானாமதுரையில் வாகன சோதனையில் துப்பாக்கிகள் பறிமுதல்: 5 பேர் கைது!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாகன சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், 50 கிராம் எடையுள்ள பால்ரஸ் குண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 19 Apr 2023, 8:21 am

ஹைலைட்ஸ்:

  • வாகன சோதனையில் இரண்டு துப்பாக்கிகள், 50 கிராம் எடையுள்ள பால்ரஸ் குண்டு பறிமுதல்
  • திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது
  • விலங்கு, பறவைகளை வேட்டையாட கொண்டுவரப்பட்டதா என போலீசார் விசாரணை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பேர்
போலீசாரால் கைது செய்யப்பட்ட 5 பேர்
போலீசார் வாகன சோதனை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை கால்பிரவு நான்கு வழிச்சாலை ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது சந்தேகத்துக்கு இடமான மினி சரக்கு வேனை போலீசார் சோதனை செய்தனர்.

பறிமுதல்

அந்த சமயத்தில் வண்டியில் இருந்து ஐந்து பேர் இறங்கி உள்ளனர். அப்போது சரக்கு வாகனத்தையும் போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் உரிமம் இல்லாத இரண்டு ஒற்றைக் குழல் துப்பாக்கி, 50 கிராம் எடையுள்ள இரும்பாலான பால்ராஸ் குண்டு, 50 கிராம் எடையுள்ள ரவை தூள்கள் போல பொடிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
அண்ணாமலையை பார்த்து எடப்பாடிக்கு பயம்" - பாஜகவுடன் நெருக்கம் காட்டும் டிடிவி... கூட்டணி மாற்றம் வருமா?
5 பேர் கைது

அவர்கள் வந்த சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியன், மோகன்ராஜ், ரவிக்குமார், நடராஜன், அஜித் குமார், ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

காவல் துறையினர் சந்தேகம்

மேலும் விவசாய நிலங்களை அழிக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளை வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கிகள் மற்றும் பொருட்கள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்றும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி