வீடுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்...சிங்கம்புணரி அருகே பதற்றம்!
ஓடப்பட்டி கிராமத்தில் 5 வீடுகளுக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Samayam Tamil 4 Dec 2021, 9:57 pm
ஹைலைட்ஸ்:
- ஒடப்பட்டி கிராமத்தில் 5 வீடுகளுக்கு தீ வைப்பு
- மர்ம நபர்களை தேடிவரும் போலீசார்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒன்றியம் மல்லாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஓடப்பட்டி கிராமத்துக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு 2 மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பாண்டி, பிச்சப்பன், செல்வம், முருகானந்தம், கலைச்செல்வி ஆகிய 5 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறிய பெட்ரோல் குண்டுகளால் 2 வீடுகளில் லேசாக தீப்பற்றியது. உடனே அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவலறிந்த திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் எஸ்.எஸ். கோட்டை காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை, ஓடப்பட்டி கிராமத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டார். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தில் 25 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும், மண்ணெண்ணெய் பாட்டில்களில் தீ வைத்து வீசியுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தகவலறிந்த திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் தலைமையில் எஸ்.எஸ். கோட்டை காவல் ஆய்வாளர் அந்தோணி செல்லத்துரை, ஓடப்பட்டி கிராமத்தில் நேற்று விசாரணை மேற்கொண்டார். அங்கு பதற்றமான சூழல் நிலவியதால் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இக்கிராமத்தில் 25 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஆடு, மாடுகள் மேய்க்கும் தொழில் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இச்சம்பவத்தில் பெட்ரோல் குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை எனவும், மண்ணெண்ணெய் பாட்டில்களில் தீ வைத்து வீசியுள்ளதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.