ஆப்நகரம்

சிவகங்கை: என்னது பேட்டரி தானாகவே ரீசார்ஜ் ஆகிடுமா? கிராமத்து இளைஞரின் அசத்தல் கண்டுபிடிப்பு!

உலகத்திலேயே முதன்முதலாக வேர்ல்ட் ஃபர்ஸ்ட் செல்ஃப் ரீசார்ஜபிள் எலக்ட்ரிக் வாகன மோட்டார் கண்டுபிடித்து கிராமத்து இளைஞர் அசத்தி உள்ளார்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 23 Apr 2023, 5:10 pm

ஹைலைட்ஸ்:

  • சிறுவயதிலிருந்தே புது வாகனங்கள் கண்டுபிடிப்பதில் ஆர்வம்
  • வேர்ல்ட் ஃபர்ஸ்ட் செல்ஃப் ரீசார்ஜபிள் எலக்ட்ரிக் வாகன மோட்டார் கண்டுபிடிப்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil கௌதம்
கௌதம்
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை
சிவகங்கை மாவட்டம் கீழடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தம்பதி அருணகிரி மற்றும் கவிதா ஆகியோரின் மகன் கௌதம். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துள்ளார். படித்து முடித்துவிட்டு படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. அதனால் பெற்றோர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று கட்டிட வேலைகளுக்கு சென்று வந்துள்ளார்.

புது வாகனங்கள் கண்டுபிடிப்பதில் ஆர்வம்

இவருக்கு சிறுவயதிலிருந்தே புது கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பதில் குறிப்பாக புது வாகனங்கள் கண்டுபிடிப்பதில் ஆர்வம் அதிகம் இருந்துள்ளது.

எலெக்ட்ரிக் ஜிப்

கடந்த 8 மாதங்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் ஜிப்பை கண்டுபிடித்து இருந்தார். இந்த ஜிப்பின் முக்கியத்துவம் என்னவென்றால் முன் பக்கம் இரண்டு சக்கரமும், பின்பக்கம் இரண்டு சக்கரமும் தனியாக கண்ட்ரோல் செய்யலாம். அதுமட்டுமில்லாமல் நான்கு சக்கரங்களையும் முன்னும் பின்னும் நகர்த்தி கொள்ளலாம். இதுவரை யாரும் இந்த மாதிரி ஜிப்பை கண்டுபிடிக்கவில்லை, இதில் ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம். இப்படி ஒரு ஜீப்பை கண்டுபிடித்து இவர் அசத்தியுள்ளார்.

ஆனந்த் மகேந்திரா பாராட்டு

இந்த இளைஞன் கண்டுபிடிப்பை பார்த்த ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் ரிப்ளை செய்து, அவருக்கு வாய்ப்பு கொடுப்பதாக உறுதியளித்து இருந்தார்.
சிவகங்கையில் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு அரிவாள் செய்யும் பணிகள் தீவிரம்
மற்றுமொரு கண்டுபிடிப்பு

இந்நிலையில் இந்த கண்டுபிடிப்புகளை எல்லாம் மிஞ்சும் விதமாக இவர் தற்போது மேலும் ஒரு மற்றுமொரு கண்டுபிடித்து நிகழ்த்தி உள்ளார். உலகத்திலே முதன்முதலாக வேர்ல்ட் ஃபர்ஸ்ட் செல்ஃப் ரீசார்ஜபிள் எலக்ட்ரிக் வாகன மோட்டார் கண்டுபிடித்துள்ளார்.

தானாகவே ரீசார்ஜ் செய்யும் பேட்டரி

உலகம் முழுவதும் தற்போது பயன்படுத்தப்படும் மின்சார வாகனங்களில் பேட்டரி பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த வாகனங்களில் பயன்படுத்தும் பேட்டரியை குறிப்பிட்ட தூரம் சென்றதுக்கு அப்புறம் கண்டிப்பாக ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

ஆனால் இந்த இளைஞரின் கண்டுபிடிப்பில் பேட்டரி தானாகவே ரீசார்ஜ் செய்து கொள்ளும் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும் அது போகும் தூரத்திற்கு ஏற்ப தானாகவே பேட்டரிகள் ரீசார்ஜ் செய்து அந்த வாகனம் இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி