ஆப்நகரம்

வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை: 21 பேர் பலி

இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 27 May 2018, 6:29 pm
இலங்கையில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil ap5-25-2018-000139b_209e5412-60ea-11e8-b354-8e7f0da49342


இலங்கையின் கொழும்பு, பொலநறுவை, புத்தளம், மொனறாகலா, காலி, களுத்துறை கேகாலை, இரத்தினபுரி, அனுராதபுரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தப் பகுதிகளில் வெள்ளநீரின் ஓட்டத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

100 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 400 வீடுகளின் பகுதிகள் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளை அதிபர் மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணப் பணிகள் தொடர்பாக அவர் கேட்டறிந்தார்.

அடுத்த செய்தி