ஆப்நகரம்

இலங்கையில் மீண்டும் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம்!

திலீபனின் 33ஆவது ஆண்டு நினைவேந்திலின் இறுதி நாளில் இலங்கையில் மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.

Samayam Tamil 26 Sep 2020, 2:00 pm
இலங்கையில் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் திலீபனின் 33ஆவது நினைவேந்தலின் இறுதிநாளான இன்று தமிழ் தேசிய கட்சிகளினால் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளது.
Samayam Tamil hunger protest


யாழ், தென்மராட்சி, சாவகச்சேரியில் அமைந்துள்ள சிவன் ஆலய வளாகத்தில் உண்ணாவிரம் நடைபெற்று வருகிறது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சிறுவனிடம் தவறாக நடத்துகொண்ட இளைஞர்கள் கைது

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் எம்.பி சரவணபவன், ஈபிஆர்எல்எஃப் கட்சி தலைவர் சுரேஷ் பிரேம சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா, அருந்தவபாலன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச கட்டமைப்பு உடைக்கப்பட வேண்டும்: கோத்தபய வலியுறுத்தல்

மேலும் தமிழ் கட்சிகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பொது மக்கள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி