ஆப்நகரம்

இலங்கை விமான நிலையம்: எப்போது திறக்கப்படும்?

கட்டுநாயக்க விமான நிலையம் திறப்பு குறித்து விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 26 Aug 2020, 1:55 pm
இலங்கையில் அடுத்த மாதமும் கட்டுநாயக்க விமான நிலையத்தைத் திறக்க வாய்ப்பில்லை என விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil airport


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் சர்வதேசப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. மிகக் குறைவான விமானங்களே அங்கொன்றும் இங்கொன்றுமாக இயக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள நாடுகளில் மட்டுமல்லாமல் குறைவாக பதிவான நாடுகளிலும் இதேதான் நிலைமை.

இந்நிலையில் அண்டை நாடான இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகம் இருப்பதன் காரணமாகவே அடுத்த மாதமும் விமான நிலையத்தைத் திறக்க வாய்ப்பில்லை என்று இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் உப தலைவர் ரஜீவ் சூரயாச்சி தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல் பண்ணமாட்டேன்: ராஜபக்சே

அதனாலே விமான நிலையம் கால வரையின்றி தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்காக திறக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் 2,971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில் 2,816 பேர் குணமடைந்துள்ளனர். 143 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவால் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி