ஆப்நகரம்

சர்வதேச சுற்றுலா பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்திய இலங்கை அரசு!!

இலங்கையின் கட்டுநாயக் பகுதியில் அமைந்துள்ள பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையம் திறக்கப்படுவது மேலும் தாமதமாகும் என்று இலங்கையின் சுற்றுலா துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அரசின் இந்த அறிவிப்பால் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Samayam Tamil 5 Sep 2020, 9:58 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையம் தற்போதைக்கு முழுமையாக திறக்க வாய்ப்பில்லை என்று சுற்றுலா அமைச்சக செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil airport


சுகாதார அதிகாரிகள் அளித்துள்ள அறிவுறுத்தலின் அடிப்படையில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக விமான நிலையத்தை முழுமையாக திறக்க முடியும். ஆனால், உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத்தலின்படி கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க இன்னும் இரண்டாண்டுகள் ஆகும் எனத் தெரிகிறது.

இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு விமான நிலையம் இப்போதைக்கு திறக்கப்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத் துறை செயலாளர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அரசின் இந்த அறிவிப்பால் இலங்கைக்கு வர பல மாதங்களாக ஆவலுடன் காத்திருத்தும் சர்வதேச சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலாத் துறையை வலுப்படுத்த மகிந்த ஆலோசனை!

பண்டாரநாயக் சர்வதேச விமான நிலையம் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று இலங்கை அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி