ஆப்நகரம்

Colombo: இலங்கையில் தணியாத பதற்றம்: மேலும் ஒரு குண்டு கண்டுபிடிப்பு

இலங்கை தலைநகா் கொழும்புவில் இன்று மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களிடையே தற்போது வரை அச்சம் குறையவில்லை.

Samayam Tamil 24 Apr 2019, 11:23 am
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடா் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் அந்நாட்டு மக்கள் தொடா்ந்து அச்சத்தில் உறைந்துள்ளனா்.
Samayam Tamil Sri Lanka Blast


இலங்கையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மொத்தமாக 8 இடங்களில் குண்டுவெடிப்பு நடத்தப்பட்ட நிலையில், 7 இடங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தொிவித்துள்ளது.

தற்போது வரை இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 359 போ் உயிாிழந்துள்ளதாக அதிகாரப்பூா்வமாக தொிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் யாரும் வெளியில் வரவில்லை. போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு நகருக்குள் வெடிபொருட்களை நிரப்பிய சிறிய வாகனம் ஒன்றும், லாரி ஒன்றும் ஊருக்குள் புகுந்துள்ளதாக அந்நாட்டு உளவு அமைப்பு தகவல் தொிவித்தது. அதன் பின்னா் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதனைத் தொடா்ந்து இன்று காலை கொழும்பு நகரத்தில் சவாய் திரையரங்கம் அருகில் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை பாதுகாப்பு துறையினா் சோதனை செய்தனா். இதில் அந்த வாகனத்தில் வெடி பொருட்கள் இருந்த நிலையில், அதனை அதிகாாிகள் பாதுகாப்பாக செயல் இழக்கச் செய்தனா்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடா் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது வரை ஆங்காங்கே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அச்சத்திலேயே உள்ளனா்.

ருவன் விஜவா்தனே
இந்நிலையில் அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சா் ருவன் விஜவா்தனே செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் பேசுகையில், தொடா் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 359 போ் உயிாிழந்துள்ளனா். இதில் 39 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். அவா்களில் 17 போின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் தொடா்பாக தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இரண்டொரு தினத்தில் நாடு முழுமையாக பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் என்று அவா் தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி