ஆப்நகரம்

தூங்கிக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை சுற்றிய பாம்பு: அடுத்து நேர்ந்த அதிர்ச்சி!

தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Samayam Tamil 12 Jan 2021, 8:51 pm
இலங்கை ஒஸ்போன் தோட்டம் பகுதியை சேர்ந்த சிறுவன் ரொபட் தோபிய எஸ்கர். 12 வயதான அச்சிறுவன் தனது வீட்டில் நேற்று இரவு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்துள்ளான். அப்போது, சுமார் 1 மணியளவில் சிறுவனின் கழுத்தை பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதை கண்ட அவனது பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


தொடர்ந்து, அந்த பாம்பை அடித்து கொன்று விட்டு, மீண்டும் அவர்கள் தங்களது தூக்கத்தை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில், அதிகாலை சுமார் 4 மணியளவில் சிறுவன் ரொபட் தோபிய எஸ்கர் தனது மயக்கம் வருவது போன்று இருப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

இதையடுத்து, டிக்கோயா கிளங்கன் மருத்துவமனைக்கு அவனை பெற்றோர் கொண்டு சென்றுள்ளனர். அவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், சிறுவனை கடித்த பாம்பும் இறந்த நிலையில் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

தமிழர் இடத்தில் தங்கப் புதையல் கண்டுபிடிப்பு!

அதன் தொடர்ச்சியாக சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அந்த சிறுவன் பாம்பு கடித்த விஷத்தினால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை உறுதி படுத்தியுள்ள நோட்டன் பிரிஜ் போலீசார், வழக்குப்பதிவு செய்து அடுத்தகட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

அடுத்த செய்தி