ஆப்நகரம்

இலங்கையை இலக்காகக் கொண்டுவரும் புரேவி புயல்!

புரேவி புயல் முதலில் இலங்கையில் கரையைக் கடக்க உள்ளதால் தமிழகத்தைவிட இலங்கையில் அதிக பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samayam Tamil 2 Dec 2020, 2:39 pm
புரேவி புயல் திரிகோணமலைக்கு கிழக்கு – தென் கிழக்கு திசையில் 200 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
Samayam Tamil sri lanka burevi


திரிகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியூடாக முல்லைத்தீவுக்கு அருகில் இன்று (டிசம்பர் 2) இரவு 7 – 10 மணி வரையான காலப் பகுதிக்குள் கரையைக் கடக்கும் என இலங்கை வானிலை ஆய்வு மையத்தினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

75 – 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது. காற்று பலமடைந்து 95 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக எதிர்வுகூறப்படுகின்றது.

அடுத்தகட்ட ஊரடங்கு, கல்லூரி திறப்பு தேதி: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

வடக்கு, வட மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் 150 மில்லி மீட்டர் வரையான மழை பதிவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு, வட மத்திய, மத்திய, மேல், மற்றும் சபரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் மழை பதிவாகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரேவி புயல் இன்றிரவு 7 முதல் 10 மணி வரையான காலப்பகுதியில் இலங்கையை ஊடறுத்து செல்லும் என கூறப்பட்டுள்ளது.

ஜனவரியில் தமிழக பள்ளிகளைத் திறக்க திட்டம்? அரசுக்கு அழுத்தம்!

சீரற்ற வானிலையால் வட மாகாணத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (03) மற்றும் நாளை மறுதினம் (04) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த செய்தி