ஆப்நகரம்

கொரோனா எதிரொலி: பேருந்து போக்குவரத்து நிறுத்தம்!

கொரோனா பரவல் காரணமாக இலங்கையில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Oct 2020, 3:28 pm
இந்தியாவில் கொரோனா பரவல் புது புது உச்சங்களைத் தொட்டபோது இலங்கையில் கொரோனா பாதிப்பு பெரியளவில் உயரவில்லை. அதனாலே அங்கு பொதுத் தேர்தல் திட்டமிடப்பட்டபடி நடைபெற்றது
Samayam Tamil corona lockdown


ஆனால் தற்போது இலங்கையில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 7875 ஆக பதிவாகியுள்ளது. நேற்று மட்டும் 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணிகளில் 312 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் 39 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 1,041 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் எனவும் ஏனைய 3,359 பேர் மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் தொற்றுக்குள்ளான ஊழியர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் என கோவிட் 19 தடுப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி இனி இயங்காது: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 25) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நகரங்களின் எல்லை வரை பேருந்து சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று (அக்டோபர் 26) முதல் பிரதான மார்க்கம், களனி மற்றும் புத்தளம் மார்க்கங்களில் அலுவலக ரயில், தூர சேவை, கடுகதி மற்றும் தபால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, இன்று முதல் கரையோர மார்க்கத்தில் 6 ரயில் சேவைகளும் (கொள்ளுப்பிட்டி வரை), உயர்தர மாணவர்களுக்கான பிரதான மற்றும் சிலாபம் மார்க்கங்களில் 12 ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த செய்தி