ஆப்நகரம்

இதை சும்மா விடக் கூடாது... இலங்கை குண்டு வெடிப்பிற்கு தலைவர்கள் பிரலங்கள் கண்டனம்

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பல தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனமும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 21 Apr 2019, 1:18 pm
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தேவாலயம், நட்சத்திர ஹோட்டல்கள் என 6 இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழப்பு சுமார் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாகவும், 280க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Srilanka blasts


கிறிஸ்துவர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டா் திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் கிறிஸ்தவா்கள் தேவாலயங்களுக்குச் சென்று சிறப்பு பிராா்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில் இலங்கை தலைநகா் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இலங்கை தேவாலயங்களில் குண்டுவெடிப்பு; நூற்றுக்கும் மேற்பட்டோா் பலி

இந்நிலையில், கொழும்பு கொச்சிக்கடை அந்தோணியாா் தேவாலயத்திலும், நீா்கொழும்புவில் உள்ள மற்றொரு தேவாலயத்திலும் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளன. அதே போன்று நட்சத்திர விடுதிகள் என மொத்தம் 6 பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது.

Sri Lanka Bomb Blast: இலங்கை குண்டு வெடிப்பிலிருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகை ராதிகா

இந்த தொடர் குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பிற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.


இந்தியாவின் அரசியல் தலைவர்களும், திரைத்துறையினர் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு குறித்த அறிந்துகொள்ள உதவி எண் வெளியிட்டுள்ளார்.










அடுத்த செய்தி