சர்வதேச சிறுவர் தினம் மற்றும் ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் 125 ஆவது ஆண்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சே ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த மருத்துவமனையின் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டிய மகிந்த ராஜபக்சே, எலும்பு மாற்று சிகிச்கை மற்றும் புதிய அறுவை சிகிச்சை கட்டடங்களையும் திறந்து வைத்தார்.
அத்துடன், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சே ஆகியோர் இணைந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். அப்போது பேசிய பிரதமர், குழந்தைகள் தின கொண்டங்களை முன்னிட்டு சிறுவர் மருத்துவமனைக்கு வந்தது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மட்டுமே சிறுவர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டிய ராஜபக்சே, அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் மருத்துவமனை நிறுவப்பட வேண்டும். இது தொடர்பாக தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவை அடுத்து கொழும்பை அச்சுறுத்தும் இன்னொரு ஆபத்து!
குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது என தெரிவித்த ராஜபக்சே, இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது தமது பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன், மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்சே ஆகியோர் இணைந்து சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். அப்போது பேசிய பிரதமர், குழந்தைகள் தின கொண்டங்களை முன்னிட்டு சிறுவர் மருத்துவமனைக்கு வந்தது குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கண்டி மாவட்டத்திற்குள் மட்டுமே சிறுவர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது என்று சுட்டிக்காட்டிய ராஜபக்சே, அனைத்து மாகாணங்களிலும் சிறுவர் மருத்துவமனை நிறுவப்பட வேண்டும். இது தொடர்பாக தமது அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கொரோனாவை அடுத்து கொழும்பை அச்சுறுத்தும் இன்னொரு ஆபத்து!
குழந்தைகளின் ஆரோக்கியம் என்பது மிக முக்கியமானது என தெரிவித்த ராஜபக்சே, இந்த குழந்தைகள் தான் எதிர்காலத்தில் நாட்டை பொறுப்பேற்கவுள்ள தலைவர்கள். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டியது தமது பொறுப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.